புருஷ விரதம்

"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1992-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "புருஷ விரதம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 148 - 149 )
அர்த்தநாரிக்கு அந்தப் புத்தகத்திலுள்ள பல மந்திரங்கள் மனப்பாடமாயிருந்தன. ஆனால், எதையும் உருவேற்றிக் கொள்ளவில்லை.
அப்பா சொல்லிக் கொடுத்த சில மந்திரங்கள் தவிர வேறு எதையும் அவன் முறைப்படி கற்றதில்லை.
அப்பா "உனக்கு இது போதும்." எல்லாம் சொல்லித் தர முடியாது. நீ பிள்ளை என்பதற்காக சகலமும் உனக்கு இலகுவாய் தந்துவிடக் கூடாது.
இதைக் கற்க உனக்கு நேரம் வரும்போது கற்க முடியுமே தவிர, இதை பரம்பரைச் சொத்து என்பதைப் போல நான் மாற்ற முடியாது.
இது கடல். எல்லையில்லாதது. பிரபஞ்சம் முழுவதும் படர்ந்த ஒளியிலிருந்து ஜீரணிக்கப்பட்டது. அந்த ஒளியைத் தன்னுள் வசப்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடியது.
உனக்குத் தேவையெனில் ஏங்கு. ஏக்கம் உச்சியில் வரும்போது விருப்பம் பூர்த்தியாகும். ஏக்கம் உச்சிக்கு நகரும்போது ஒன்றை அடைவதற்கான செயல்திட்டமும் உனக்குத் தெளிவாய்ப் புலப்படும்.
ஏக்கம்தான் வாழ்க்கை.ஆசைதான் செயல். செயலில் வெற்றி வேண்டுமெனில் ஆசையைத் தீவிரப்படுத்து. வெற்றி தானாய் உன்னிடம் வந்து சேரும்.
நீ வெற்றியை நோக்கிப் போனாயா... அல்லது வெற்றி உன்னை நோக்கி வந்ததா என்று தெரியாமலேயே நீ அடைய நேரிடும்.
Share:

1 comment:

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com